×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மே 8: அரசு கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் எடை இழப்பினை தொழிலாளர்கள் மீது சுமத்துவதை கண்டித்து திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து உடனடியாக எடுத்து செல்லாத நிலையில் நீண்ட நாட்கள் இருப்பு வைக்கப்படுவததன் காரணமாக ஏற்படும் எடை இழப்பிற்கான தொகையினை கொள்முதல் நிலைய  தொழிலாளர்கள் மீது சுமத்துவதை கைவிட வேண்டும்.

 கொள்முதல் தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கும் வகையில் மின்னணு பணப் பரிமாற்றத்தினை விரைவுபடுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ஏஐடியுசி சங்கம்  சார்புடைய டிஎன்சிஎஸ்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் வாயில் கூட்டத்தில் ஈடுபட்டனர்.   மன்னார்குடி சாலையில்  இருந்து வரும் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற வாயில் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகேஷ் தலைமை வகித்தார். சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், இணை பொதுச் செயலாளர் குணசேகரன் மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : unions ,Thiruvarur ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...