×

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையம்

திருத்துறைப்பூண்டி, மே 8: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை உடனே திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்  மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு  மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. திருத்துறைப்பூண்டி காவல்  நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறையால் அடிக்கடி இரண்டு புறக்காவல் நிலையங்களும் பூட்டிக்கிடப்பது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்ட  பிறகு புறக்காவல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில்  திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலுள்ள புறக்காவல் நிலையம்  பூட்டி கிடக்கிறது.

ஏற்கனவே இந்த பகுதியில் பொதுமக்கள் நிற்க கூட முடியாது. அந்த  அளவிற்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறு  ஏற்படும் போது பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே  பொதுமக்கள் நலன் கருதி புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்திற்கு  காவலர் நியமித்து திறந்திட வேண்டுமென்று பொதுமக்கள் மாவட்ட காவல்  கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை