கும்பகோணம், மே 8: மழை பெய்ய வேண்டி கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வருண யாகம் நடந்தது. கோடை காலத்தையொட்டி அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் இல்லாமல் மரம், செடிகள் காய்ந்து வெப்பமயமாகியுள்ளது. இதனால் உஷ்ணம் அதிகரித்தால் பல்வேறு நோய்கள் உருவாகும், பொதுமக்கள், கால்நடைகள் இன்னல்களுக்கு ஆளாகும் என்பதால் மழை பெய்ய வேண்டி கோயில்களில் வருண யாகம் மற்றும் ஹோமம் நடத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று வருண யாகம், வருண மகா யாகம், வேதாபாராயணம், மேகராக குறிஞ்சி பண்ணுடைய திருமுறை பாராயணம், மேகவர்ஷினி முதலான ராகங்களுடன் நடநதது. பின்னர் காசிவிஸ்வநாதர், விசாலாட்சிய்யம்மன், நவகன்னிகைகள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.