×

மினி வேன் மோதி மீனவர் பலி

சேதுபாவாசத்திரம், மே 8: சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மந்திரிப்பட்டினம் காலனி தெருவை சேர்ந்தவர் குழந்தைவேலு (60). மீனவரான இவர் கடந்த 30ம் தேதி இரவு மந்திரிப்பட்டினம் கடைவீதிக்கு சென்று வீட்டுக்கு பால் வாங்கி கொண்டு வந்தார்.  சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது பின்னால் வந்த மினி வேன் மோதியது.  இதில் தலையில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...