×

பொன்னமராவதி அருகே சங்கனகருப்பு கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

பொன்னமராவதி, மே 8: பொன்னமராவதி அருகே உள்ள சங்கனகருப்பு கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலையில் பொன்னமராவதி பழைய தாலுகா அலுவலகம் எதிரே சங்கனகருப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலின் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காசுகள் கீழே விழுந்து கிடந்தது. உண்டியல் அருகே ஒரு கம்பியும் கிடக்கிறது. இதைக்கண்ட அவ்வழியே சென்றவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் யாரும் உடைத்தார்களா? அல்லது திருடர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Tags : Theft ,Sangamkarupu ,temple ,Ponnamaravathi ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...