×

பேரூராட்சி சார்பில் போர்வெல் கிணறு அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை, மே 8: பேரூரட்சி சார்பில் போர்வெல் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, எஸ்எஸ் நகரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீருக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இங்கு ஆழ்துளை கிணறு அமைத்தால் இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிடும் எனக்கூறி அப்பகுதியினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவும் குடிநீருக்காவே அமைக்கக்கூடியதுதான். இப்பகுதியினரின் கோரிக்கையை ஏற்றுதான் இங்கு அமைக்கப்படுகிறது. பொது இடத்தில் அமைக்கப்படும் இந்த ஆழ்துளை கிணறினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என பேரூராட்சி அலுவலர்கள் அளித்த விளக்கத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏற்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குசாலை மறியலில் ஈடுட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் ஆலங்குடி, செம்பட்டிவிடுதி சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Borewell ,
× RELATED தாம்பரத்தில் ரூ.80.70 லட்சம் மதிப்பில்...