×

அம்மன் ஊர்வலத்தில் மோதல்

தாரமங்கலம் மே 8: தாரமங்கலம் அருகேயுள்ள சிக்கம்பட்டியில் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஊருக்குள் சாமி ஊர்வலம் வந்தது. இந்த ஊர்வலத்தில், அதேபகுதியை சேர்ந்த விக்ரம் (30), அவரது மைத்துனர் தனசேகர் (28) ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சாமி ஊர்வலம் சென்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அதே ஊரை சேர்ந்த சதீஷ்(21), சந்தோஷ் (49), கார்த்தி (50), ரவி (23) ஆகிய நான்கு பேருக்கும், விக்ரம், தனசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த விக்ரம், தனசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : Confrontation ,Amman ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...