×

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி,மே8: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா 5வது நாளாக நடைபெற்று வருகிறது. பொன்னமராவதியில் உள்ள பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 3ம் தேதி (வௌ்ளிக்கிழமை) தொடங்கியது. அன்று முதல் தினமும் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. நேற்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் பூத்தட்டு பால்குடம் எடுத்து குதிரைகள், யானை ஊர்வலத்துடன் சென்று பட்டமரத்தான் கோயிலில் வழிபட்டனர். இதேபோல வலையபட்டி அரசு மருத்துமனையில் சார்பில் பால்குடம், பூத்தட்டு எடுத்து வழிபட்டனர். முன்னதாக காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பூக்கள் கொண்டு வந்து வழிபட்டனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பூச்சொரிதல் விழா வரும் 10ம் தேதி (வெள்ளிக்கிழமையுடன்) நிறைவடைகிறது.


Tags : Festival celebration ,Poonamaravathi Pattamarathan ,
× RELATED ஜாம்புவானோடை பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்