×

திருப்புனவாசல் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகே உள்ள முத்துவேல் நகரை சேர்ந்தவர் இருதையராஜ் (50). இவர் எலக்ட்ரீசியனாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று சாத்தியடி கிராமத்தில் தெருவிளக்கு எரியவில்லை என்பதால் அதனை சரிசெய்ய புதிய பல்ப்பை எடுத்துக்கொண்டு மின்கம்பத்தில் ஏரினார். மேலே சென்று புதிய பல்பை மாட்டும்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி மின்கம்பத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து திருப்புனவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதையராஜ் உடலை மீட்டு மனமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags : Electrocution ,Thirupunavasal ,
× RELATED ஆந்திராவில் மின்சாரம் தாக்கி...