×

ராசிபுரத்தில் பல்லாங்குழியான சேலம் சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு

ராசிபுரம், மே 8:  ராசிபுரம் நகராட்சியில் 3 ஆண்டுகக்கு முன்பு தொடங்கிய பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புதிய குடிநீர் பணிகள் நடந்து வருகிறது. இதனால் நகரில் சாலை கள் மிகவும் மோசம் அடைந்தது. இதனால் பொது மக்கள் . வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து உள்ள ளார்கள். இதில் ராசிபுரம் சேலம் சாலை பழைய பஸ் நிலையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கியது.

தேர்தல் சமயத்தில் முதல் வர்த்தக பிரச்சாரம் செய்ய வந்த போது பாதாள சாக்கடை பணிகள் முடிக்காமல்  மூடப்பட்டது. இதனால், வாகன போக்குவரத்து தொடங்கியது. மண் சாலையில் வாகன போக்குவரத்து காரணமாக புழுதி பறந்தது. தற்போது மீண்டும் பாதாள சாக்கடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ராசிபுரம்-சேலம் சாலையில் சேலம் ஆட்டையாம்பட்டி பகுதிக்கு செல்லும் வாகனங்கள் ஆண்டகளூர் கேட் வழியாக இயக்கப்படுகிறது.

Tags : Palaiyar Salem Road ,Rasipuram ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...