×

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தேர்தல்குழு கூட்டம்

நாமக்கல், மே 8: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்த நாமக்கல்லில் இன்று தேர்தல்குழு கூட்டம் நடைபெறுகிறது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 123 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சம்மேளனத்துக்கு 2019-2022ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் வேலு தலைமையில் தேர்தல்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் குழுவின் முதல் கூட்டம் இன்று(8ம் தேதி) காலை 11 மணிக்கு நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் தேர்தல்குழு தலைவர் வேலு தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான தேதி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. 20 ஆண்டுக்கும் மேலாக சம்மேளன தலைவராக நாமக்கல்லை சேர்ந்த செங்கோடன் இருந்து வந்தார். இவது மறைவுக்கு பிறகு சுமார் 5 ஆண்டுகள் நாமக்கல்லைச் சேர்ந்த நல்லதம்பி மாநில தலைவராக இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டாக சங்ககிரியைச் சேர்ந்த குமாரசாமி மாநில தலைவராக இருந்து வருகிறார்.

Tags : State ,Meeting Meeting ,Larry Owners Federation ,
× RELATED ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை...