×

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றிய அவலம்

ஓசூர்,மே 8:  ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. ஓசூர் ஜனப்பர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (30). தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னையால் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அருணை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அருணுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதில், ஒரு குளுக்கோஸ் முழுவதும் செலுத்தப்பட்டு, மற்றொரு குளுக்கோஸ் மாற்றப்பட்டது.

அப்போது வந்த உறவினர்கள் குளுக்கோஸ் பாட்டிலை பார்த்தபோது அது காலாவதியானது என தெரிந்தது. காலாவதியான நாள் 11/ 2018 என்று குறிப்பிட பட்டிருந்தது. இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக குளுக்கோஸ் ஏற்றப்படுவதை நிறுத்தினர். பின்னர் வேறு பாட்டில் பொருத்தி செலுத்தப்பட்டது. இது குறித்து அருண் கூறும் போது காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்டாலும் மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள் என்றார்.

Tags : patient ,Government Hospital ,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...