கிருஷ்ணகிரி, மே 8: ராயக்கோட்டை அருகே நெல்லூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகள் பிரியங்கா (22, பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). இவர் பிடெக் முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் ராயக் கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில், பிரியங்காவை அதே பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி (25) என்பவர் கடத்தி சென்றதாக தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.