×

சீர்காழியில் கோடைகால கூடைப்பந்து சிறப்பு பயிற்சி நிறைவு

சீர்காழி, மே 8:சீர்காழி தனியார் பப்ளிக் பள்ளி கூடைப்பந்து மின்னொளி  விளையாட்டு மைதானத்தில் கோடைகால இலவச கூடைப்பந்து சிறப்பு பயிற்சி நிறைவு விழா  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விவேகானந்தா, குட்சமாரிட்டன் கல்விக் குழுமங்களின் தலைவர்  ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூடைப்பந்து தேசிய பயிற்சியாளர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் சூர்யா,  குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குநர்கள் பிரவீன்வசந்த் ஜபேஷ், அனுஷாமேரி முன்னிலை வகித்தனர். தினந்தோறும் மாணவர்களுக்கு காலை, மாலை  கூடைப்பந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தேசியப் பயிற்சியாளர்கள் ரவி மற்றும் சூர்யா ஆகியோர் பயிற்சியளித்தனர். இதற்கிடையே, மாணவர்களின் வயது அடிப்படையில் போட்டிகள்  நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்வி குழுமங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Tags : Sirkali ,
× RELATED சீர்காலி கடைவீதியில் மருத்துவ குணம் கொண்ட செவ்வாழை பழம் விற்பனை