×

கரூரில் 3 மாதத்திற்கு பிறகு லேசான மழை மக்கள் மகிழ்ச்சி

கரூர், மே 8: கரூரில் மூன்று மாதங்களுக்கு பிறகு லேசான அளவு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து, மூன்று மாதங்களாக கரூர் மாவட்டம் முழுதும் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. மேலும், வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திர வெயில் மே 4ம்தேதியே துவங்கி விட்டது. தற்போதைய நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு, நேற்று மாலை 6மணியளவில்,  மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசியதோடு, அரை மணிநேரமாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, கரூர் நகரின் சீதோஷ்ணநிலை மாறியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...