×

பயணிகள் காத்திருக்கும் அறையில் குடிமகன்கள் அட்டகாசத்தினால் நடைமேடையில் நிற்கும் மக்கள்

கரூர், மே 8: பயணிகள் காத்திருக்கும் அறையில் குடிமகன்கள் அட்டகாசத்தினால் மக்கள் நடைமேடையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் பேருந்துநிலையத்தில் அரசுவிரைவுப்போக்குவரத்துக்கழக அலுவலகம் அருகே பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளது. இங்கு திறந்தவெளியாக உள்ள இடத்தில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளிலும் அருகில் தரையிலும் குடிமகன்கள் நேற்று ஆக்கிரமித்துக்கொண்டனர். கொளுத்தும்வெயிலில் இதமாக இங்கு வந்து தூங்கி விட்டனர். இதனால் பயணிகள் உட்கார இடமில்லை. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் நடைமேடை அருகே நீண்டநேரமாக உட்கார்ந்துகொண்டும் நின்றுகொண்டும் இருந்தனர். பேருந்துநிலையத்தில் புறக்காவல்நிலையம் உள்ளது.

இந்த புறக்காவல்நிலையத்தில் காவலர்கள் இருப்பதில்லை. பூட்டியே கிடக்கிறது. இரவு பகல் நேரங்களில் புறக்காவல்நிலையங்களில் போலீசாரை நியமித்து பேருந்து நிலையத்தில் ரோந்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும். பயணிகளுக்கு இடையூறாக இடத்தை ஆக்கிரமித்து தூங்குபவர்களை அப்புறப்படுத்த வேண்டும். போலீசாரின் ரோந்து கண்காணிப்பு தொடர்ந்து இருந்தால்தான் சமூக விரோத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : waiting room ,passengers ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!