×

நாசரேத் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

நாசரேத், மே 8:  நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு விழா நடந்தது. வைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் தலைமை வகித்தார். குருவானவர் வனிதாராணிஆபிரகாம் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி தாளாளர் சசிகரன் வரவேற்றார். முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.  முன்னாள் எம்.பி ஏ.டி.கே. ஜெயசீலன், சாத்தான்குளம் தொழிலதிபர் ஜெயபிரகாஷ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பில்லிகிரஹாம் பேசினர். பல்வேறு போட்டிகள் மற்றும் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு  சிறப்பு பரிசுகள், தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. இதையொட்டி மாணவ,  மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், செல்வின், லயன் தங்கராஜ், தூய  யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தகுமாரி, நாசரேத் சேகரபொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ், ஜோசுவா, நந்தகுமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Nazareth Engineering College Anniversary ,
× RELATED நாசரேத் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா