×

சாலையில் திரிந்த புள்ளிமான் மீட்பு

புழல், மே 8: செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நேற்று மதியம் 2 மணி அளவில் புள்ளிமான் ஒன்று சாலையில் அங்கும் மிங்கும் சுற்றித்திரிந்தது. இதைப்பார்த்த மக்கள் உற்சாகமடைந்து அதனுடன் செல்பி எடுத்தனர். தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், அந்த மானை மீட்டு, ஊராட்சி மன்ற அலுவலத்தில் வைத்து பாதுகாப்பாக பூட்டினர். பின்னர், அந்த மானை திருவள்ளூர் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். கடும் வெயில் காரணமாக குடிநீர் தேடி மான் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததா என விசாரிக்கின்றனர்.   

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...