×

பைப் லைனில் அடைப்பு: குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

முஷ்ணம், மே 7: முஷ்ணம் அருகே வடக்குபாளையம் ஊராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த பைப்லைன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டதால் வேர்கள் புகுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரியம்மன் கோயில் தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். சிலர் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்து வருகிறார்கள். எனவே கீரப்பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பைப்லைன் வேர்களை அகற்றி தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது