×

பாகப்பிரிவினை தகராறில் முதியவருக்கு கத்தி வெட்டு

வேப்பூர், மே 7: வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் வசித்து வருபவர் பிச்சமுத்து மகன் சிவபெருமான் (55). இவரது மூத்த அண்ணன் வேலாயுதம் (60). இவர் தனது குடும்பத்தினருடன் வடமாநிலத்தில் வசித்து வருகிறார். தற்போது மகனுக்கு திருமணம் செய்து நகர் கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் குடிவைப்பதற்காக குடும்பத்துடன் வந்துள்ளார். கடந்த வாரம் முதல் சகோதரர்களான மேற்கண்ட இருவருக்குள் வீடு பாகம் பிரிப்பதில் தகராறு இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று சிவபெருமான் மகன் பிரசாந்த் (21), அவரது தாய்மாமன்கள் ஆறுமுகம் மகன் கனகராஜ், மணிகண்டன், சிவபெருமான் மனைவி அஞ்சலை ஆகியோர் வேலாயுதத்திடம் உனக்கு வீட்டில் பாகம் தரமுடியாது என கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் பிரசாந்த், வேலாயுதத்தை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

படுகாயம் அடைந்த வேலாயுதம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து பிரசாந்த்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறுமுகம் மகன்கள் கனகராஜ், மணிகண்டன், சிவபெருமான் மனைவி அஞ்சலை ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : elderly ,
× RELATED வத்தலக்குண்டுவில் இரு முதியவர்கள் சடலம் பூட்டிய வீட்டிற்குள் மீட்பு