×

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் ஆத்தூர் ஜெய்வின்ஸ் அகாடமி பள்ளி மாணவர்கள் சாதனை

ஆத்தூர்,  மே 7: ஆத்தூர் அம்மம்பாளையம் அம்மன் நகரில் உள்ள  ஜெய்வின்ஸ் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் அதிக  மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில் சிபிஎஸ்இ  பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று,  100 சதவீகித தேர்ச்சி சாதனையை படைத்துள்ளனர். மாணவி ஹேமபிரியா  463 மதிப்பெண்களும், பிரியங்கா 462 மதிப்பெண்களும், சுந்தர் 458 மதிப்பெண்களும், ஸ்ரீநிசா 457 மதிப்பெண்கள் பெற்று முதல் 4 இடங்களை பெற்று பள்ளிக்கு பெருமை  சேர்ந்துள்ளனர்.

மேலும், 400 மதிப்பெண்களுக்கு மேல்  16 பேர் பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தலைவர் இளவரசு பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர்  இளையராஜா, முதல்வர் கிறிஸ்டோபெல் ஜெர்மி, நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும்  ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியில் தற்போது பிளஸ் 1 வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மதிப்பெண் அடிப்படையில் கட்டண சலுகை வழங்கப்படும் என பள்ளி நிர்வாகிகள்  தெரிவித்தனர்.

Tags : Athur Jai ,CBSE ,
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...