×

கிறிஸ்தவர்களுக்கென கல்லறை தோட்டம் ஒதுக்க கோரிக்கை

போச்சம்பள்ளி, மே 7: போச்சம்பள்ளி தாலுகா போதகர்கள் கூட்டம், போச்சம்பள்ளியில் நேற்று நடந்தது. டேவிட் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். டேவிட் மகாராஜன், ஐசக், யோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நோபல் இன்பராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் போச்சம்பள்ளி தாலுகாவில் வாழும் கிறிஸ்தவர்கள் இறந்தால், அவர்களை அடக்கம் செய்ய தனி இடம் இல்லை. எனவே, கிறிஸ்தவர்களுக்கென தனி கல்லறை தோட்டத்திற்கு, அரசு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வில்சன் நன்றி கூறினார்.

Tags : cemeteries ,Christians ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்