×

கொடியேற்று விழா

கிருஷ்ணகிரி, மே 7: கிருஷ்ணகிரியில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் 38வது அமைப்பு தினத்தையொட்டி சங்க கொடியேற்று விழா நடந்தது.
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் 38வது அமைப்பு தினத்தையொட்டி சங்க கொடியேற்று விழா நடந்தது. இந்த விழாவிற்கு வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்து, சங்க கொடியினை ஏற்றி வைத்தார். தேவன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் மணி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...