×

கள்ளக்காதலி திட்டியதால் வாலிபர் தற்கொலை

தர்மபுரி, மே 7: திருச்சி மாவட்டம் முசிறி திருகலையூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(27). திருமணமாகாத இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில், அரூர் கோட்டப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மாரியப்பனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரியப்பனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டது.

இதனால் அந்த பெண், அவரது சொந்த ஊரான கோட்டப்பட்டிக்கு சென்றுவிட்டார். அந்த பெண்ணை பார்க்க, நேற்று முன்தினம் மாரியப்பன் சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் மாரியப்பனை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர், அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை