×

மலைவழிப்பாதையில் தடுப்புச் சுவரை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

உடுமலை, மே 7:உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், காமனூத்து பள்ளம் அருகே வளைவில் தடுப்பு சுவர் இடிந்து கிடக்கிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது, பக்கவாட்டில் சரிந்து பள்ளத்தில் விழும் வாய்ப்பு உள்ளது. தினசரி இவ்வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.குறுகிய சாலையாக உள்ளதால் விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே, எஸ் பெண்டு பகுதியில் தடுப்பு சுவர் இடிந்துள்ளது.எனவே, உடனடியாக மூணாறு சாலையில் பழுதடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vehicle drivers ,
× RELATED நாமக்கல்லில் வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்