×

பொதுத்தேர்வில் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருப்பூர், மே 7: திருப்பூர் குமார்நகரில் செயல்பட்டு வரும் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளியின் மாணவ-மாணவிகள் 3 பேர் முறையே 500-க்கு 489, 485, 485, 484 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். சமூக அறிவியலில் 7 மாணவர்களும், அறிவியலில் 2 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.  இதேபோல் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. மாணவ-மாணவிகள் 4 பேர் 600-க்கு 584, 579, 579, 578 மதிப்பெண்கள் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.4 மாணவர்கள் வணிகவியலிலும், 4 மாணவர்கள் கணக்குப்பதிவியலிலும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளித் தாளாளர் அருட்தந்தை ஆரோக்கிய ததேயூஸ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

Tags : Inpatient School of Public School ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...