×

பொன்னமராவதி சந்தைப் பகுதியில் குப்பைகள் நிறைந்து பூட்டியே கிடக்கும் பொதுக் கழிப்பறை சீரமைக்க கோரிக்கை

பொன்னமராவதி,மே7: பொன்னமராவதி சந்தைப் பகுதியில் குப்பைகள் நிறைந்து பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூந்து நிலையம் கிழக்குப்பகுதி சந்தை மற்றும் மார்க்கெட் உள்ளது. இந்த சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலனுக்காக சந்தையின் தெற்குப்புறம் கிழக்குப் பகுதியில் கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் கூடும் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு  இது பயனுள்ளதாக இருந்து வந்துள்ளன.

இந்நிலையில் கழிப்பறை செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த கழிப்பறை முன் குப்பைகள் கொட்டப்பட்டு  சுகாதார கேடாக உள்ளது. இந்த கழிப்பறையின் அருகே வடிகால் சரியாக செல்லாமல் கழிவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் தென்பகுதியில் உள்ள அண்ணாநகர் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலையுள்ளது. எனவே இந்த வடிகாலை சுத்தம் செய்து கழிவு தண்ணீர் தேங்காமல் செய்யவேண்டும், பூட்டிக்கிடக்கும் கழிப்பறையின் முன் கொட்டிக்கிடக்கும் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தி இந்த கழிப்பறையினை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnaravarai ,removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...