×

வயி.சண்முகம் பிள்ளை ஜூவல்லரியில் ஆன்டிக் தங்க, வைர நகை கண்காட்சி நடிகை பிரியா ஆனந்த் துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை, மே 7: புதுக்கோட்டையில் இயங்கிவரும் 79 வருட பாரம்பரியமிக்க கைராசி ஸ்தாபனமான வயி.சண்முகம்பிள்ளை ஜுவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் புக்கிங் செய்பவர்களுக்கு வெள்ளி இலவசமாக வழங்கப்படவுள்ளது. மேலும்  இன்று கடைபிடிக்கப்படவுள்ள அட்சய திருதியை முன்னிட்டு பிரத்யோக ஆன்டிக் தங்கநகை மற்றும் வைர நகை கண்காட்சியை திரைப்பட நடிகை பிரியாஆனந்த் துவக்கி வைத்தார். இதில் எண்ணிலடங்கா மாடல்கள் உள்ளது.

மேலும் வைர நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.  வர வர ராசியாகும்,  வாங்க, வாங்க தங்கம் சேரும் என்பதற்கேற்றாப்போல் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்கப்பட்டு வருகின்றன. மேலும் சுபமுகூர்த்தங்களுக்கு மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிரடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அதற்கென தனி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

முன்னதாக  ஷோரூமில் குத்துவிளக்கை நடிகை பிரியாஆனந்த், கடை உரிமையாளர் வயி.ச.வெங்கடாசலம் மற்றும் குடும்பத்தினர் ஏற்றி வைத்தனர். கண்காட்சியினை பிரியாஆனந்த் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.. பின்னர் ஷோரூம் முன்பாக அமைக்கப்பட்ட மேடையில் பொதுமக்களிடம் கடையின் தரத்தை பற்றியும் திறக்கப்பட்டுள்ள கண்காட்சி பற்றியும்  பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உரிமையாளர் வயி.ச.வெங்கடாசலம் மற்றும் நிர்வாக இயக்குனர் ராகுல்வெங்கடாசலம் செய்திருந்தனர்.

Tags : Priya Anand ,Diamond Jewelery Exhibition ,
× RELATED ரஹ்மான் இசையில் பாடினார் ஸ்ருதி