×

உடல்நலக்குறைவால் ஆண் யானை பலி

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் காப்புக்காடு நாயக்கன்பாளையம் வடக்கு சுற்று பகுதியில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய சுமார் 12 வயதுடைய ஆண் காட்டு யானை பொங்காளியம்மன் கோயில் பகுதியில் உள்ள பட்டா நிலத்திற்கு நேற்று வந்தது. இது தொடர்பாக தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த ஆண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரின், அறிவுறுத்தலின் பேரில் கோவனூர் கால்நடை உதவி மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், யானை சிகிச்சைப்பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தது. இதையடுத்து, யானையின் உடல் பரிசோதனை இன்று நடக்கிறது. இதன் பின் யானை இறப்பிற்கான காரணம் குறித்து தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post உடல்நலக்குறைவால் ஆண் யானை பலி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Periyanayakanpalayam ,Tadakam reserve forest ,Nayakkanpalayam ,Dinakaran ,
× RELATED காருக்கு இஎம்ஐ செலுத்த முடியாததால்...