×

ஐடி நிறுவன ஊழியரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

கோவை, மே 7:  ஐடி நிறுவன ஊழியரை பீர்பாட்டிலால் தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு வாலிபரை போலீசார் தேடுகின்றனர். ஆலாந்துறை செம்மேடு கரும்பு காட்டு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கிருஷ்ணன்(27). இவர் கோவையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பூலுவபட்டி டாஸ்மாக் கடை பாரில் அமர்ந்து கிருஷ்ணன் நேற்று முன்தினம் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது, செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவ்பல் (29), நண்பர் ரஞ்சித் குருவுடன் மது குடிக்க அங்கு சென்றனர். அப்போது ஆட்டோ டிரைவர் மற்றும் கிருஷ்ணன் இடையை வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் நவ்பல், ரஞ்சித்குரு இருவரும் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து கிருஷ்ணன் தலையில் தாக்கி விட்டு தப்பியோடினர்.இதில், படுகாயமடைந்த கிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் அளித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் நவ்பலை கைது செய்தனர். ரஞ்சித் குருவை தேடிவருகின்றனர்.

Tags : Auto driver ,IT company employee ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...