×

துடியலூர் சிறுமி கொலை குற்றவாளி மூதாட்டியை கொலை செய்ததாக மாதர் சங்கத்தினர் எஸ்.பியிடம் புகார்

கோவை, மே 7: கோவை அடுத்த துடியலூரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் அவரது பாட்டியை கொலை செய்திருக்கலாம் என மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட எஸ்.பியிடம் நேற்று புகார் அளித்தனர்.இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா எஸ்.பி சுஜித்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை அடுத்த துடியலூரில் கடந்த மார்ச் மாதம் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீசார் சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இதில் சம்பவம் நடந்த தேதியில் சந்தோஷ்குமார் அவரது பாட்டி அய்யம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அய்யம்மாள் நல்ல உடல் நிலையுடன் இருந்துள்ளார். ஆனால் அன்றைய இரவு அய்யம்மாள் மர்மமான முறையில் இறந்துள்ளார். பின் முக்கிய உறவினர்களுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 மேலும் பாட்டியை படுக்க வைத்திருந்த பாயில் ரத்தம் சிந்தியுள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து காவல்துறையிடன் சிறுமியின் பெற்றோர் கூறியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் சிறுமி கொலையிலும் அவரது உறவினர்கள் சந்தோஷ்குமாருக்கு உடந்தையாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. பாலியல் வல்லுறவு செய்ய பாட்டி அய்யம்மாள் தடையாக இருந்ததால் அவரை சந்தோஷ்குமார் கொலை செய்திருக்கு வாய்ப்புள்ளது, இதனால் அய்யம்மாளின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : associate ,Mather ,murder ,SBI ,Tudiyalur ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...