×

பைக் மீது ஸ்கூட்டர் மோதல் கணவர் கண்முன்னே மனைவி பலி

ஈரோடு, மே 7:  ஈரோட்டில் பைக்- ஸ்கூட்டர் மோதிக்கொண்ட விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.ஈரோடு சூரம்பட்டிவலசு பாண்டியன் வீதியை சேர்ந்தவர் இசாக்(58). கூலி தொழிலாளி. இவரது மனைவி முனியம்மா(55). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் நேற்று முன்தினம் ஈரோடு திருப்பதி கார்டன் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக இசாக் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி முனியம்மா ரோட்டில் விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முனியம்மா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Scooter clash ,
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை