×

குற்றாலத்தில் வணிகர் தின விழா

தென்காசி, மே 7: குற்றாலத்தில் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில் வாடகைதாரர்கள் மற்றும்  குற்றாலம் வியாபாரிகள் சங்கத்தின் 17ம் ஆண்டு துவக்க விழா மற்றும்  வணிகர் தின விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் காவையா  தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அம்பலவாணன், துணை தலைவர் வேல்ராஜ், துணை  செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் பண்டாரசிவன்  வரவேற்றார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. பொருளாளராக ஸ்ரீதர், நிர்வாக குழு உறுப்பினர்களாக இசக்கி, ஜடாமணி,  பரசுராமன், மணிகண்டன், முத்தையா, ஐயப்பன், ரவிச்சந்திரன், பொன்மணிகண்டன்,  குத்தாலிங்கம், கனகராஜ், சாகுல்ஹமீது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

குற்றாலத்தில் மெயினருவிக்கு மேலே சிறு சிறு தடுப்பணைகளை கட்டி  விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயனளிக்கும் வகையில் தண்ணீரை சேமிக்க ஆவண செய்ய  வேண்டும். குற்றாலம் மெயினருவி பகுதியில் பழுதடைந்துள்ள ஜெனரேட்டர், சன்னதி பஜாரில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க  வேண்டும். குற்றாலநாதர் கோயில் கடைகளை 1.7.2016 முதல் பழைய வாடகையில் இருந்து  70 சதவீதம் வரை உயர்த்திய வாடகையை கோயில் நிர்வாகம் குறைக்க வேண்டும்.  கோயில் அலுவலகத்தில் கடைகளுக்கு வாடகை பணம் கட்டினால் அதற்குரிய ரசீதுகளை  உடனே வழங்காமல் 2 மாதத்திற்கு மேலாக வியாபாரிகளை தொடர்ந்து  அலைக்கழிக்கின்றனர். எனவே ரசீதை உடனே வழங்க வேண்டும். திருக்கோயில்  அலுவலகத்திற்கு எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிக்கு உடனடியாக  குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். சன்னதி தெரு மற்றும் ரதவீதிகளில்  பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாக குழு உறுப்பினர் பொன்மணிகண்டன்  நன்றி கூறினார்.

Tags : Trader's Day Festival ,
× RELATED விஷம் குடித்த தொழிலாளி சாவு