×

எரிந்த நிலையில் ஆண் சடலம் கொலையா? போலீஸ் விசாரணை

தஞ்சை,மே7:வல்லம் அருகே வல்லம் புதூர் தென்னந்தோப்பு வாய்க்காலில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக வல்லம் போலீசில் விஏஓ செந்தில்குமார் நேற்று புகார் செய்தார்.இதன்பேரில் வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது 50 வயது நிறைந்த ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. மேலும் சடலம் அருகே கார், காலியான பெயிண்ட் டப்பா இருந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : investigation ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...