×

கடம்பூர் கிராமத்தில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம்

செந்துறை, மே 7: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர்.இதற்கு விசை தெளிப்பான் மூலம் நீர் பாய்ச்சப்படுவதால் குறைந்த நீரில் அதிக மகசூலை பெற முடிவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இதனால் களைகள், பூச்சிகள் கட்டுபடுவதோடு காய்கள் செழிப்பாக பச்சை பசேலென உள்ளது.  இங்கு பயிரிடப்படும் காய்கள் அருகிலுள்ள சிறு வியாபாரிகள், மற்றும் மொத்த வியாபாரிகள், சந்தை போடுபவர்கள் என எளிதில் விற்பனை செய்ய முடிவதாக விவசாயி சிலம்பரசன் தெரிவித்தார். தற்போது மொத்தமாக 15 ரூபாயும் சில்லரையாக  ரூ.20ம் விற்பனை செய்கின்றனர்.

Tags : village ,Kadampur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...