அரியலூர், மே 7: கொடுக்கூரை சேர்ந்த தற்கொலை செய்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று அரியலூர் எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டம் குவாகம் காவல் நிலைய சரகம் கொடுக்கூர் காலனி தெருவை சேர்ந்தவர் பிரபு (எ) தெய்வசிகாமணி. இவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் பிரபு என்கிற தெய்வசிகாமணி என்பவரது இறப்பு குறித்து தவறான தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் பரப்பி ஜாதி பிரச்னை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பரப்பினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்.இவ்வாறு அரியலூர் எஸ்பி னிவாசன் தெரிவித்துள்ளார்.