கரூர், மே 7: கரூர் கலெக்டர் அலுவலக்தில் வைக்கப்பட்டுள்ளபெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக போடுவதற்கு ஏதுவாக பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதி உள்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை பொதுமக்கள் இந்த பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.