×

சாய்பாபா கோயிலில் சிவதரிசனம்

நெல்லை, மே3:  திருச்செந்தூர் ஷிர்டி சாய்பாபா கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிவதரிசனம் நடந்தது. திருச்செந்தூர் தேரடி வீதியில் உள்ள ஷிர்டி சாய்பாபா ஆலய மடத்தில் பிரதோஷத்தையொட்டி தத்தாத்திரேயரின் அவதாரமாக உள்ள ஷிர்டி சாய்பாபாவுக்கு ஜடாமுடி, பிறைசந்திரன், திரிசூலம் வைத்து சிவன் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பக்தர்கள் வில்வ இலை எடுத்து வந்து மழை வேண்டி சாய்பாபாவுக்கு அர்ச்சனை செய்து  வழிபட்டனர். ஏற்பாடுகளை ஷிர்டி சாய் மிஷன் நிறுவனர் செல்வமுருகன் செய்திருந்தார்.

Tags : Sai Baba ,
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!