×

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18ம்தேதி உள்ளூர் விடுமுறை

ஸ்பிக்நகர், மே 3: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வரும் 18ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா மே 18ம்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்றய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் பணி நாளாக இயங்கும் கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறை, மின்வாரியம் மற்றும் இதுபோன்ற இதர அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.  எனினும் வரும் 18ம்தேதி பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக ஜூன் 8ம் தேதி (2ம் சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : holiday ,occasion ,Thoothukudi district ,festival ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!