×

திருநாவுக்கரசர் குருபூஜை விழா

சங்கரன்கோவில், மே 3:  சங்கரன்கோவில் மேலரதவீதியில் உள்ள வேலப்பதேசிகர் ஜீவசமாதியில்  63 நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான திருநாவுக்கரசர் சுவாமி குருபூஜை விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆறுமுகநயினார் சைவ மரபினர் சங்க தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். குருபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆறுமுகநயினார் சைவமரபினர் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ராஜா, சரவணன், கட்டிட பராமரிப்பு செயலாளர் மாணிக்கம், பிரமநாயகம், சமூகஆர்வலர் சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆறுமுகநயினார் சைவமரபினர் மகமை பொதுசங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags : Tirunavukkarar Gurupooja ,festival ,
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...