×

எஸ்எஸ்எல்சி தேர்வில் ஆத்தூர் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் சாதனை

ஆத்தூர், மே 3: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் ஆத்தூர் மெட்ரிக் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி ஆரியா 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியை, பள்ளி நிர்வாகிகள் பாலகுமார், வரதராஜன், செல்வம், கோமதுரை, பாலு, முகமது ஈசாக், கண்ணன், விஸ்வநாதன், நல்லியப்பன் மற்றும் முதல்வர் ஆசிரிய ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். இந்த கல்வி ஆண்டிற்கான எல்கேஜி முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Attar Saraswathi School Students Recruitment ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது