×

நங்கவள்ளி அருகே கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்

மேச்சேரி, மே.3:  நங்கவள்ளி அருகே, குழந்தையோடு கள்ளக்காதலனுடன் மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். நங்கவள்ளி அருகே வனவாசி கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் ராஜவேல் (30) கைதறி தொழிலாளி. இவருக்கும் இடைப்பாடியை சேர்ந்த பேபி (22) என்பவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தனது தயார் வீட்டுக்கு சென்று வருவதாக மகளுடன் காலையில் பேபி சென்றார். பின்னர் தனது மனைவிக்கு ராஜவேல் போன் செய்தார். அப்போது போனை எடுக்கவில்லை.

உடன் தனது மாமியாருக்கு போன் செய்து கேட்டபோது பேபி இங்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். அச்சமடைந்த ராஜவேல், மனைவியை உறவினர் மற்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் நங்கவள்ளி போலீசில் புகார் செய்தார். அதில், இடைப்பாடியை சேர்ந்த தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. எனவே எனது மனைவி மற்றும் குழந்தையுடன் தமிழ்ச்செல்வன் கடத்தியதாக புகாரில் கூறியிருந்தார். இதன் பேரில் எஸ்ஐ பிரகாஷ் விசாரித்து குழந்தையுடன் மாயமான பேபி மற்றும் தமிழ்ச்செல்வனை தேடி வருகிறார்.

Tags : Nangavalli ,
× RELATED குட்கா விற்றவர் கைது