×

வீரகனூர் சந்தையில் டூவீலர்கள் திருட்டு

கெங்கவல்லி, மே 3: கெங்கவல்லி தாலுகா வீரகனூரில், வாரம்தோறும் திங்கட்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் வார சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த 22ம் தேதி, வீரகனூர் அருகே பூலாம்பாடியை சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜேந்திரன்(38) தனது டூவீலரில் காய்கறி ஏற்றி கொண்டு வாரச் சந்தைக்கு வந்துள்ளார். பின்னர், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு, வியாபாரம் செய்தார். வியாபாரம் முடிந்த பிறகு வந்த போது, டூவீலர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதேபோல் சொக்கனூரைச் சேர்ந்த அம்மாசி மகன் மாதேஸ்வரன்(33) என்பவர், பேரூராட்சி கட்டிடம் முன்பு நிறுத்தி விட்டு சென்ற டூவீலரையும் காணவில்லை. இது குறித்து இருவரும், வீரகனூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மாவட்ட எஸ்பி தீபக் கனிக்கரிடம் புகார் மனு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Tags : theft ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது