×

பத்தாம் வகுப்பு தேர்வில் ஆத்தூர் பாரதியார் பள்ளி மாணவர்கள் சாதனை

ஆத்தூர், மே 3: பத்தாம் வகுப்பு தேர்வில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி நேகவர்த்தினி, 500க்கு 493 மதிப்பெண்களும், பிரித்திகா 490 மதிப்பெண்களும், மாணவர் லோகானந்த் 485 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாரதியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் இளவரசு, செயலாளர் டாக்டர் ராமசாமி, பொருளாளர் செல்வமணி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

மேலும், 2 மாணவர்கள் 490 மதிப்பெண்ணும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 470க்கு மேல் 22 பேரும், 460க்கு மேல் 36 பேரும், 450க்கு மேல் 53 பேரும், 400க்கு மேல் 134 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 7 பேரும், கணிதம் மற்றும் அறிவியலில் ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாகக்குழுவினர் பாராட்டினர். பள்ளியில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என பள்ளியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Athur Bharatiyar School ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்