×

எஸ்டிபிஐ நடவடிக்கையால் துபாயில் இறந்தவர் உடல் விமானத்தில் திருச்சி வந்தது

திருச்சி, மே 3: பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாட்டை சேர்ந்தவர் முகமது ஷெரிப்(60). இவருக்கு ஜபின் தாஜ் என்ற மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். முகமது ஷெரீப் 25 வருடங்களாக துபாயில் கேட்டரிங் துறையில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், கடந்த 1 மாதத்துக்கு முன் மீண்டும் துபாய் சென்றார். இந்நிலையில் கடந்த 27ம் தேதியன்று மாரடைப்பால் அங்கு அவர் மரணம் அடைந்தார். முகமது ஷெரீப்பின் உடலை மீட்டு தர வேண்டும் என அவரின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளை நாடினர். இதனால் எஸ்டிபிஐ கட்சியினர் துபாயில் உள்ள துபாய் சோசியல் போரம் அமைப்புடன் தொடர்பு கொண்டனர். அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை முகமது ஷெரீப்பின் உடல் ஏர் இந்தியா விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் மஜித், கிழக்கு தொகுதி செயலாளர் காதர், மாவட்ட இணையதள பொறுப்பாளர் முத்தலிப், டோல்கேட் கிளை தலைவர் பாஷா ஷெரிப், செம்பட்டு முகமது அலி ஆகியோர் உடலை பெற்று, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடல் லப்பைக்குடிகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

Tags : Trichy ,Dubai ,SDPI ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...