×

13 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்சுழி, மே 3: திருச்சுழி அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. திருச்சுழி அருகே ராமசாமி நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2000 ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை படித்த பழைய மாணவ, மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தற்போது இந்த பழைய மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களாகவும், அரசு அலுவலர்களாகவும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்தோடு 13 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த நிகழ்வை ஒவ்வொருவரும் பரிமாறிக்கொண்டு பள்ளி பருவ காலம் மீண்டும் வந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தற்போது பழைய மாணவ, மாணவியர்கள் சார்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு படிப்பிற்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கும் நிதி திரட்டியுள்ளோம் என கூறினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ரகுராம், நேரு, அய்யனார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கை குறித்து பரிமாறிக்கொண்டனர்.

Tags : alumni meeting ,
× RELATED அரசு மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி