×

பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி

தேவதானப்பட்டி, மே 3: தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் உள்ள மாயாபாண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மேல்மங்கலம் வராகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மாயாபாண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாயாபாண்டீஸ்வரர், பிருகன்நாயகி அம்மாள், விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஞ்சள்பொடி, மாபொடி, திருமஞ்சனதிரவியம், பால், தயிர், இளநீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், பழவகைகள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம், தீபாராதகைள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சிவசிதம்பரம் நடத்தினார்.

Tags : Prado ,
× RELATED அரியலூர் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு3