×

குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

திருப்பூர், மே 3:கோவை-மும்பை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் (11014) தினமும் காலை 7.30 மணிக்கு  கோவையிலிருந்து புறப்பட்டு  திருப்பூர், ஈரோடு, சேலம் கடந்து மதியம், 2:40க்கு மும்பை சென்றடைகிறது. இரவு, 10:35க்கு மறுமார்க்கமாக புறப்படும் ரயில், மறுநாள் காலை, 7:00 மணிக்கு கோவை வந்தடைகிறது. இதுவரை இந்த ரயிலில் ஏழு படுக்கை வசதி, ஐந்து முன்பதிவு பெட்டி, இரண்டு ஏ.சி., பெட்டி, மூன்று பொது பெட்டிகள் இருந்தது.நேற்று முதல் கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஒரே ரயில் இதுவாகும். கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘மும்பை செல்லும் பயணிகளின் டிக்கெட் புக்கிங் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு மார்க்கத்திலும், கூடுதலாக ஒரு பெட்டியுடன் குர்லா எக்ஸ்பிரஸ் இயங்கும். இம்மாதம், 31ம் தேதி வரை இது அமலில் இருக்கும்,’ என்றனர். கூடுதல் ஏ.சி.பெட்டி இணைக்கப்படுவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kurla Express ,
× RELATED இன்ஜினில் புகை வந்ததால் தர்மபுரி...