×

வெவ்வேறு சம்பவங்களில் அரசு பஸ் ஊழியர் உட்பட 4 பேர் சாவு

கோவை, மே 3: கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் அரசு பஸ் ஊழியர் உட்பட 4 பேர் இறந்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டியை சேர்ந்தவர் நடராஜ்(54). இவர் அரசு போக்குவரத்து கழகத்தின் சுங்கம் கிளையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை பணிக்கு வந்த நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சக ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல்லை சேர்ந்தவர் சிவகாமி(40). ஆதிவாசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 28ம் தேதி அங்குள்ள மலைப்பகுதியில் விறகு பொறுக்க சென்றார். அப்போது பாறை மீது ஏறும் போது வழுக்கி விழுந்தார். இதில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

கோவையை அடுத்த நெகமம் கோப்பனூர் கேகே புதூரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, இவர் நேற்று முன் தினம் நெகமம் பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக் மோதி இறந்தார். கோவை கோவில்மேடு வ.உ.சி.நகரை சேர்ந்தவர் பிரகதீஷ்(30). இவர் நேற்று முன் தினம் நரசீபுரம் தென்னமநல்லூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி மோதி இறந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : government bus workers ,incidents ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி