×

முருக பக்தர்கள் காவடியாட்டம்

சாயல்குடி, மே 3: தேவகோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்கள் கடலாடியில் காவடியாட்டத்துடன் சுவாமி வீதி உலா வந்தனர். தேவகோட்டை ராஜமுருகன் பாதயாத்திரை குழுவினர் 21ம் ஆண்டு பாதயாத்திரையை கடந்த 26ம் தேதி தேவகோட்டையில் துவங்கினர். கடலாடிக்கு நேற்று வந்த பக்தர்கள் காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள் செய்து, திருவிளக்கு பூஜை நடத்தினர். முருகனுக்கு ஊஞ்சலிட்டு தாலாட்டுதல், வேல் காவடிக்கு பூச்சாட்டுதல் நடத்தி வழிபட்டனர். பிறகு அலங்காரம் செய்யப்பட்ட முருகன் படத்துடன் கடலாடியின் முக்கிய வீதிகளில் மயில் காவடியாட்டம், இளநீர் காவடியாட்டம், வேல் காவடியாட்டம் ஆடி வந்தனர். பொதுமக்கள் அரோகரா கோஷத்துடன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags : Murugan ,devotees ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...